salem-சேலத்தில் கொரோனாவுக்கு பெண்கள் உள்பட 4 பேர் பலி

சேலம், சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்தது. மேலும் உயிரிழப்புகளும் அதிகளவு ஏற்படுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் பஞ்சபள்ளி பகுதியை சேர்ந்த 53 வயதுடைய பெண் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனிமை வார்டில் சிகிச்சை பெற்று வந்தார்.

இவர் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதே போல் பர்கூரை சேர்ந்த 39 வயதுடைய பெண் ஒருவர் உடல்நலம் குறைவால் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த 58 வயதுடைய ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனிமை வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் இரவு இறந்தார்.திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 69 வயதுடைய பெண் உடல் நலக்குறைவு காரணமாக சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதன் மூலம் சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது.

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
About Author