கூடலுார் பகுதியில் சூறாவளியால் சாய்ந்த தென்னை, வாழை மரங்களை தேனி வேளாண் இணை இயக்குனர் அழகு நாகேந்திரன் தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர்.
கூடலுார், வெட்டுக்காடு, 18 ம் கால்வாய் உள்ளிட்ட பகுதிகளில் ஆக. 5 ல் விவசாயிகளுக்கு சொந்தமான 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை, நுாற்றுக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன. அதனை கணக்கெடுத்து அரசுக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டனர். வேளாண் உதவி இயக்குனர் சுந்தரமகாலிங்கம், உரம் மற்றும் தரக்கட்டுப்பாடு உதவி இயக்குனர் மணிகண்ட பிரசன்னா, வேளாண் அலுவலர்கள், உதவி ளோண் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
You must be logged in to post a comment.